காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 909 ஏரிகள் 100% நிரம்பின
Views - 315 Likes - 0 Liked
-
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், சித்தாமூர், சூனாம்பேடு, கடப்பாக்கம், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், படாளம், கருங்குழி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. ஏரி, குட்டைகள் நிரம்பியதால் அவற்றில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. ஏரி, குட்டைகள் நிரம்பியதால் அவற்றில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில் 100% கொள்ளவை எட்டி உள்ளது.News